Wednesday, 29 June 2016

அவள்

கூந்தல் பரப்பில்
தொங்கும்
ஊசலாட்டம்
ஒளிர்த்தும்
கசங்கிய வெளியினில்...
முதல்
கடைசியில்
தீண்டிச் சுழலும்
கனவுகளுக்கடியில்...
எதிர்ப்படும்
முகங்களிலெல்லாம்
தெறித்து சிதறும்.
நிலையின்றி
அலைவுறுத்தும்
பெயர்...

சுவாசம் உறிஞ்சி
நிரப்பும்
உயிர் வெற்று
ஊமைப் புலம்பலில்
அவிழ்த்து
சதைகளாய்
எறியும்
மாசற்ற
தழல் துளியில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
புழுத்துடிப்பு....
சிறு துண்டங்களாய்
அரிகையில்
உள்...வெளி...அந்தரம்...

கூர் நுனியில் வன்முறை
போதை வஸ்து
மயங்கிய குறுக்குவெட்டு
இல்லாமையில் நிறைவு
தூயதின் வெறுப்புமிழ்வு
அகால புகலிடம்
சாட்சியின் தன்னிரக்கம்
சுகங்களின் சமர்
சுயத்தின் ஒட்டுண்ணி
காட்சியில் வெளி
கலையும் மேகப்பூச்சு
புவியின் ஈர்ப்பு!




















No comments:

Post a Comment