Thursday, 23 June 2016

புழுவெட்டிகள்




மனிதன் தோண்டி புதைக்கும்
மேற்பக்க பிதுக்கலின்
பைத்தியக்காரத்தனம் அசையவும்
அசையாது கடிக்கவும்
கீழ்ப்பக்கம் இன்னும் எந்திரிக்கவில்லை
அது தன் உறக்கத்தின் ஓர் கனவில் பாடும் பாடல்
ஒ! மனிதா
நீ வாரிக்கொள்
தள்ளியதை வென்றெடு
சீரிய எதிர்நோக்கில்
காற்றின் சீரமைவில் பயணத்தை முடுக்கு விடு
கழிந்தவைகளை உரசிப் பற்றி எரி
அந்த நகர்வின் மானத்தை காப்பாற்று
உள்ளே தேங்கிய என் கடலின் நுரைகளை மட்டும்
அப்படியே விட்டு விடு
அது உனக்கல்ல”

No comments:

Post a Comment