Thursday, 23 June 2016

அம்மை


காலம்
விரல் பிடித்து
பின்னோக்கும்
நிழல் படிமத்தில்
அம்மையும் பிள்ளையுமாய்
பிரபஞ்சங்கள்
நகர்கின்றன

அவள் என்பது
எப்படியும்
அம்மையாகிடுதல்
மட்டும்தான்

விரல் தொடுகையில்
வலியிழந்து
கனவு காணும்
பெரும் பித்து

நிறைவடையா
கண்ணியில்
பிள்ளைகளால்
நிறைக்கும்
அனிச்சை லீலை

தன் குருதி
சொட்டிய
மொத்தமுமான
வெளியில்
அம்மைக்கானது
மொத்தமும் தானே

வாழ்வென்பதன்
நித்தியம்
மூட்டும்
அழியாப்
பெருங்கனா

சகலமும்
உறிஞ்ச வற்றா
பெருங்குருதி
சுரக்கும்
முடிவில்லா
முலைக்காம்பு

No comments:

Post a Comment