Thursday, 23 June 2016

மூளித் தேவதை


காணல்

செத்து போனது தலை சம்மாட்டில் ரசித்துக் கொண்டிருந்தது
இருட்டடிப்பு நடந்திருந்த உள் வெதும்பலை சோபை செய்யாது
நினைவு அவள் முந்தானை நறுமணத்தில் ஏங்கி கொண்டிருக்க
தவறி விழ வழியுண்டா என பிரஞ்சையில்லாது குழி தேடியது
தள்ளாட்டத்தில் கள்ளூற தலைக்கேறிய மாய போதை
இல்லாததில் இருப்பதை பிடித்து கொள்ளும் சுயம்
கட்டுப்படா வலிமையுணர்ச்சி சத்தமிட்டது
அது காது நுனிகளின் நக்குதலுக்கு ஆழப்பட்டிருந்தது
உச்சி வரை கலங்கடிக்கும்
அசையும் எல்லா இருப்புகளும் பொதிந்து வைத்த அழகு
அழகை எண்ணுதலில் தோற்கடிக்கப்படும்
எல்லா பிறவிகளுக்கும் சேர்த்து மொத்தமாய் உறிஞ்சி விடும்
அந்தியமில்ல்லா பார்வையில் தீர்ந்து சொட்டு சொட்டாய்
வெதும்பி கிளம்பும் என் வெக்கை
பிறக்க வழி தேடும் தவித்தலை அவள் வருகையின் கால் பதிவில்
ஆதிகாலம் உருண்டையாய் கைகளில் சிக்கிய பெருமிதம்
ரத்தப்படலமாய் அவள் உதட்டு நுனிகளில்
கனவாய் புகை மூட்டமாய் கலைந்து கொண்டிருந்தது விடியல்!

விளித்தல்

கூர்மையாய் இன்னும் காணாது
கண்கள் காட்டாற்று வெள்ளமாய் தள்ளும் இழுப்புகளில்
எட்டி மிதிக்கும் பயம் தொண்டையடைப்பில் உருள
அழைப்பு
ஜென்மம் மறந்து புதுப்பிறப்பின் முதல் வழிதேடல்
அவள் கால் பெருவிரல் நுனி என் நெற்றியை அழுத்த
பேரண்ட சாம்பலாய் நான் கரையும்
மின்னல் கீற்றாய் மறைந்ததுமுதல் முத்தம்
 

புணர்தல்

மேகம் உட்கவரும் பனிவெள்ளம்
கருத்த மேடாய் வெடிக்கத் துடிப்பதாய்
நான் மறைய அவள் வெளிப்படத் துடித்தாள்
துளி கிளறும் பின் உட்கொண்டு எச்சமாய் துப்பும்
இலக்கு தாண்டும் உடல் நிலைபெறாது உருக
நரம்புகளின் ரீங்காரக் குருதியோட்டம்
கிழிக்க கொப்பளித்தது என் மழை
இருட்டுக் காட்டில் உடைந்து சிதறுண்ட
வானத்தின் எல்லா மூலைகளையும்
இன்றாக நீலத்தில் நிலைப்பேற்றுவதில்
அணைந்தது தீச்சுடர் முதல் இருட்டு
 

No comments:

Post a Comment