நமைச்சலை
சொரிந்து
கொண்ட
ஒரு
அந்திம
ராத்திரி
நிசப்தத்தில்
நின்றிருந்த
என்
கனவுகளின்
ஒன்றில்
இளஞ்சூட்டு
வெளிச்சத்தில்
என்
தோண்டி
எடுத்த
பழைய
பிறக்காத
உணர்ச்சி
பிதுக்கல்களை
கண்டேன்
தகிப்பின்
வெறி
வெளிக்கொணர்ந்த
ஒன்றில்
அன்று
மூழ்கி
செத்து
போனது
ஒன்று
மழைவில்லில்
நனைந்த
உச்சி
பகல்
பொழுதில்
செருக்குடன்
உற்றுப்பார்த்த
எண்ணப்பேராவலில்
கிளர்ந்தெழும்
என்
ரகசியங்களை
திறந்த
சமயம்
காற்றின்
இரைச்சலில்
கலந்து
போனது
ஒன்று
ஆதியாய்
நான்
வாசித்த
என்
நரம்புகளில்
பீறிட்ட
இசைப்பொதுக்கல்களில்
இன்னும்
‘இன்னும்
என்னிடம்
கிடைக்கா
ஒன்றின்
எஞ்சிய
ஓட்டின்
உள்
பக்க
வெளியில்
தகித்து
கொண்டிருந்த
என்
ஏளனப்பார்வையின்
மௌன
வ்யாக்கானங்களை
இழுத்தெடுத்த
போது
செத்தது
ஒன்று
ஏதும்
கிடைக்கா
பசியின்
ஏக்கமிக்க
அலட்சிய
கண்களில்
நாள்
தொட்டு
வளர்த்த
என்
அங்கலாய்ப்பின்
மூட்டையை
அவிழ்த்து
ரசித்துக்
கொண்டு
இன்னும்
கிடைக்கா
என்
தீனியின்
கனவில்
மூர்ச்சையற்று
உறங்கியதும்
செத்து
போனது
ஒன்று
என்னோடு
படர்ந்து
வளர்ந்து
கட்டுப்பாட்டின்
வெளிக்கொணர்வில்
தன்னை
மூழ்கடித்து
வாய்
கடித்து
தன்
கணப்பின்
ஆங்காரத்தை
அடைத்து
முளைக்க
வழியில்லா
நிலத்தின்
வெறுமையின்
பகட்டை
என்னிடம்
கொணர்ந்த
போது
செத்து
போனது
ஒன்று
அழிவின்
கடைசி
தினத்தில்
நான்
பாதுகாத்த
என்
சொந்த
தன்
முனைப்பை
பகிர்ந்து
கொள்ள
தைரியமில்லா
என்
அடிமைத்தனத்தின்
ஒரே
சுதந்திரத்தை
நான்
பறி
கொடுத்த
போது
செத்தது
ஒன்று
இன்னும்
பேராவலில்
இரைச்சலில்
மௌனத்தில்
கடுகடுப்பில்
வன்மத்தில்
அழிவின்
உற்று
நோக்குதலில்
கை
பிசைந்து
நிற்கும்
அவலை
பசி
நீங்காத
வரை
தீராத
நமைச்சல்
எனக்கு!