இடுப்பு போத்தல்
நழுவி
உடைந்து
மது வீச்சத்தில்...
தலையணை
நிரம்ப
சர்த்தித்து
முகம் புதைந்து
மூர்ச்சையடைந்து...
நாளைத்
தொடக்குகையில்
மண்டை பிசைந்து
நடுங்குகையில்
தன்னிரக்கத்தைக் கிழித்து
உட்புகுகையில்...
மலக்குழியில்
சாக்கடைத் தொழியில்
முச்சந்தியில்
மாடங்கோவில்
ஓலைப்பறைகளில்
பறக்கைங்கால் சக்கிளிச்சி வீட்டில்
என் பண்டிகைகளின்
கோலாகலங்கள்
உழலும் போது...
அப்பன்
கணவன்
அண்ணன்
தம்பி
மகன்
உறவுகளில்
விடுபட்டு
சமூகக் கூடுதலில்
கைகள் நடுக்கி
நரம்பு பின்னல்களில்
கழிவிறக்குகையில்...
என் பெண்ணின்
கல்யாணத்தன்று
புலியூர்குறிச்சி
மதகில்
மூர்ச்சையின்றி
தலைகீழாய்
கவிழ்ந்து
மண்டை முட்டி
பீறிட்டு,
அதுவரை பரிகாசப்படுத்திய
என் ஆன்மா விலகுகையில்
இன்னும் ஒரு மிடறு....
இருந்திருக்காதா?

No comments:
Post a Comment