ஒரு
வெற்றுக்கை
நீட்டுகையிலெல்லாம்
மூஞ்சை திருப்பிக்கொள்ளலாம்
இல்லை என்று தலையாட்டலாம்
நிற்காது நகர்ந்து போகலாம்
செல்போனில் பேசலாம்
அசிங்கமாய் வெறிக்கலாம்
சில சில்லறைகளை வீசலாம்
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம்
பரிதாபப்படலாம்
பொறாமைப்படலாம்
சிலக் கெட்ட வார்த்தைகள் உதிர்த்து
அறிவு ஜீவியாகாலாம்
நிச்சயம் நிச்சயமாக
உன் காலடியில்
துடித்துக்கொண்டிருக்கும்
அந்த அகங்காரத்திடம்
கதைக்க இயலாதுதானே?
மலக்குழியில்
சாக்கடைத் தொழியில்
முச்சந்தியில்
மாடங்கோவில்
ஓலைப்பறைகளில்
பறக்கைங்கால் சக்கிளிச்சி வீட்டில்
என் பண்டிகைகளின்
கோலாகலங்கள்
உழலும் போது...
அப்பன்
கணவன்
அண்ணன்
தம்பி
மகன்
உறவுகளில்
விடுபட்டு
சமூகக் கூடுதலில்
கைகள் நடுக்கி
நரம்பு பின்னல்களில்
கழிவிறக்குகையில்...
என் பெண்ணின்
கல்யாணத்தன்று
புலியூர்குறிச்சி
மதகில்
மூர்ச்சையின்றி
தலைகீழாய்
கவிழ்ந்து
மண்டை முட்டி
பீறிட்டு,
அதுவரை பரிகாசப்படுத்திய
என் ஆன்மா விலகுகையில்
இன்னும் ஒரு மிடறு....
இருந்திருக்காதா?