Saturday, 2 July 2016

ஓர்மை


ஒரு
வெற்று முழங்கை
நீட்டுகையில்
சுருக்குகள்
அவிழ்ந்து
சங்கு உடைத்து தொங்கிய
ஓர்மையுண்டு...

நிகழும் பெருங்கணக்கில்
அந்தத் துளி
உறைந்து கிடக்கும்
அது
கலையும் அந்தியில்
இருள் சூழ்கையில்
பதை பதைத்து
வழியும்...

அங்கு தவறாகும்
கணக்குகளும்
விடைகளும்!

No comments:

Post a Comment