திடூமென்று
வேர்கள் பிடுங்கின
குன்றுகள் பிளந்தன
சூறையால் பிண நாற்றம்
பறவைகளின் எச்சத்துளிகள்
காற்றின் தும்பினைக் கிழித்து
வீழ்கிறது
அணக்கமின்றி
காடு பிறாண்டிய துகள்கள்
மனிதத் தலைகளில்
தீக்கங்காய்
விரவிப்பாய்கிறது
மரணம்!
ஆழத்தின் வெட்டையில்
சூனிய விதைகளின்
உக்கிரம்
மோனத்தின் வாசலில்
கையேந்தி நிற்கையில்
ஓர்மையில் நழுவிய
ஒற்றைக் கனலில்
திரும்பவும்
மீட்டெடுக்கத் துடிக்கிறது
வசந்தம் தீண்டிய
நாக் கொதி!
No comments:
Post a Comment