Friday 26 August 2016

நீ...


காலி
நிரப்பும்
கோப்பைத்துளிகளில்
ஒன்றிலிருந்து
ஒன்றைப் பிய்த்து
அவிழ்ந்து சொட்டும்
சதைச் சுழற்சியில்
நீலம் தோய்ந்து
அழுகும் பிணக்குவியலில்
சகத்தின் எரி
குதறிய துண்டங்களில்
காட்டுப்பச்சை
சுரக்கும் கலங்கலில்

திரளின்
ஒருமையில்
காட்டும்
கைத்தூண்டலில்
கனவின்
சாசுவதத்திலும்...




Friday 19 August 2016

மண்ணாலானது!


அல்குல்
விரித்து அனக்குது
புடவி!
தொப்புள்கொடி
பற்றி
நீண்டு
நின்று இணைந்தன
கால்கள்
பின்
துளியாகி
உன்னில்
சூனியக் காற்றாகுவேன்
இனி
தொப்புள்கொடி
அவசியமில்லை!

Friday 12 August 2016

குடிகாரனின் நாட்குறிப்புகள் 4



கலங்கமின்மையின்
ஆதியில்
படுத்துறங்குது
வானம்
நெகிழ்ந்து
நீலம் பாய்கையில்
என் நிர்வாணத்துணுக்கை
மட்டும்
அவிழ்த்து
வாய்ப்புணர சொல்வேன்
கட்டியம் கூறி
வராமல் நகரும்
மேகத்தின் கிழிந்த
கால் சிராயை
மாட்டிக்கொண்டு
தொழி புரண்டு
எக்கழிக்க

குறியைக் கடித்து
துப்பிற்று!

அந்தால...
சும்மா
மலந்து கெடக்காதட்டி
தேவடியா!


பாதம்


சவுட்டி தேய்ந்து
அழுகிப் பழுத்து
அழுக்கேறிப் பிய்ந்து
வெடித்துக்கோனி
விரல்களின்றி
மொன்னையாய்
சப்பிச் சூம்பி
வீங்கிப் பெருத்து
வெந்து பொருக்கோடி

கவனமின்றி....

கட்டாயப்படுத்திய
படுத்தா
நகர்தலுக்கும்!

காமம் காமம் காமம்



முதல் விந்து கொப்பளித்து
சன்னதமெடுக்கும்
அலகிலா விதைப்பெருக்கு
காலமின்றி 
வியர்த்த
பெண் நனைத்து
பெருகுது ஆகிறுதி
அந்த அத்தத்தின் சூட்டில்
தெறிக்கும் சுழி
சூனியத்தின் 
புள்ளிக் குத்தி
வானம் மூழ்கும் தொலைவினில்
நின்று
அறைக்கூவலிடும்
மண்ணே!

உன்னில் வேர் பற்றி
எம்பும்
துடிதுடிப்பில்
சொரூபம்! 

Thursday 4 August 2016

மரணத்தின் நாள்

சுடுகுழியில்
மலத்திய
ஆச்சியை!
எலும்புத்துண்டங்களாய்
மாமனை!
உப்பி வெடித்த
சித்தப்பனை!
அடர் பழுப்பு
சளிப்படலமாய்
தோழியை!

நறநறக்கும்
மயானச்சிதை

சொப்பன
நிசிக் காரிருளில்

துக்கம்
கண்ணீர்
கோபம்
உணர்
வன்மம்
ஏக்கம்
தாபம்
நெரிக்கும் துடி

சர்பத்தீண்டலாய்
நீலம் பாரித்து
அனக்கிறது!