முதல் விந்து கொப்பளித்து
சன்னதமெடுக்கும்
அலகிலா விதைப்பெருக்கு
காலமின்றி
வியர்த்த
பெண் நனைத்து
பெருகுது ஆகிறுதி
அந்த அத்தத்தின் சூட்டில்
தெறிக்கும் சுழி
சூனியத்தின்
புள்ளிக் குத்தி
வானம் மூழ்கும் தொலைவினில்
நின்று
அறைக்கூவலிடும்
மண்ணே!
உன்னில் வேர் பற்றி
எம்பும்
துடிதுடிப்பில்
சொரூபம்!
No comments:
Post a Comment