Wednesday, 20 July 2016

குடிகாரனின் நாட்குறிப்புகள் 3

நீர்த்துப்போன
காயங்களை வைத்து
சூதாடும் போதிலெல்லாம்
கோமாளிகள் இளிக்கின்றன!

அகத்தின் சாசுவதத்தில்
மூட்டைப்பூச்சிகள்
நசுங்க
நாற்றம் இல்லை இல்லை வாசனை!

விழுங்கும்
மிடறுகளில்
என்னை நிரப்பு...
மன்றாடுகிறான்
முகம் சிதைந்து கொண்டிருந்த
பால்ய நண்பன் இல்லை இல்லை எதிரி!

தோற்கடிக்கப்பட்ட
நம்பிக்கையிழந்த
தொலைந்து
மீளாது இன்னும் இன்னும்
மழுங்கடித்த
ஆளுமையின்
மிச்ச சொச்சங்களில்
காறி உமிழ்!

கார் உதிர் வசந்தம்
நின்று நின்று
நினைவுகளின் பிம்பத்தை
பூதக்கண்ணாடியில்
அழுத்திப்பிடிக்கிறேன்!

உன்னிடம் நான் என்பது
எப்பொழுதும்
நா...................ன்!

No comments:

Post a Comment