Wednesday, 13 July 2016

ஆதலால் உயிர்த்தெழவில்லை?



பொங்குமாத் திரையாழி
நுரையவிழ்த்து
கால்களை பற்றியிழுக்கையில்

பிரேதங்களின்
முகங்களில்

கார்
பிளந்து கொட்ட
ஸ்பரிசித்து
விசும்புகையில்

சூழ்
போர்த்தி
மயங்கும் அந்தியில்

எல்லைகளின்
விளிம்பு
உடைந்து
வெடிச்சாமானமாகுகையில்

குருட்டின்
ஒளியில்
பின் தொடரும்
தைரியத்தில்

உடலம்
அதிர்ந்து
ஊற்றெடுக்கும்
வலியில் வன்மத்தில்

ஆழம் கப்பிய
இருள்
அந்த பாதை தவறிய
ஆட்டிக்குட்டியிடம்
கேட்டது

"அவன்
உயிர்த்தெழாது
போய் விடில்..."

"உன் நம்பிக்கைக்கு
நான் ஒன்றும் செய்வதற்கில்லை
என்று பரிகாசமாய் இளித்தது
குட்டி!..."






No comments:

Post a Comment