கவிதையின் ஏமாற்றம்
ஒவ்வொரு
உயிர்த்தெழுகையிலும்
மனிதத்தின்
சூம்பிய தேகத்தில்
கன்றிப் புடைத்தது!
தெரு முக்கில்
குடல் மலந்து
கூர் நகங்களில்
கிழிந்தது!
நடு நிசியின்
மோனத்தில்
சாக்கடை குழிகளில்
பறண்டியது!
ஆடியின்
உடை பிம்பங்களில்
நிழல் பற்றும் பொழுது
அலறியது!
என் விளிம்புகள்
உடைகையில் மட்டும்
அது
ஏமாற்றியது...
No comments:
Post a Comment