தனிமை
கொந்தளிக்கிறது
அணங்கு பீடித்து
நொடியும்
விட்டில் சிறகாய்
துர்மயமாய்
அனல் அலைக்கிறது
வயிறு கிழிய
வெட்டு இழுத்து
வாயில் கட்டை
பற்கள் பொடிகிறது
அழிமுகத்தில் முட்டி
எண்ணற்றதாய்
ஒற்றையாய்
ஒரு ஈன ஊளை
விசும்பைத் துளைக்கும்...
அங்கு
நமட்டும் மௌனத்தில்
சிதையேறத் துணியும்
அந்த ஒரு ஒற்றைத் துளியால்
தழும்பினால் தானே
பேராழி!
No comments:
Post a Comment