Sunday, 17 July 2016

கடக்கையில்...

ஒரு
வெற்றுக்கை
நீட்டுகையிலெல்லாம்
மூஞ்சை திருப்பிக்கொள்ளலாம்
இல்லை என்று தலையாட்டலாம்
நிற்காது நகர்ந்து போகலாம்
செல்போனில் பேசலாம்
அசிங்கமாய் வெறிக்கலாம்
சில சில்லறைகளை வீசலாம்
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம்
பரிதாபப்படலாம்
பொறாமைப்படலாம்
சிலக் கெட்ட வார்த்தைகள் உதிர்த்து
அறிவு ஜீவியாகாலாம்
நிச்சயம் நிச்சயமாக
உன் காலடியில்
துடித்துக்கொண்டிருக்கும்
அந்த அகங்காரத்திடம்
கதைக்க இயலாதுதானே?

No comments:

Post a Comment