இதயக்கூட்டில்
அலைக்களிப்பின் துடிப்பில்
மீட்டு செல்லும்
துணுக்கு பொதுக்கல்களில்
நீ....
அகாலமெனும்
சீர்மையின்
வெளிச்சமில்லா நரம்புகள்
காற்றின் தீராப்பக்கங்களில்
சிராய்க்கும் இலைக்கணுக்களில்
வடிவமின்றி
ஒருமையை நாடும்
மறைத்து வைத்திருக்கும்
நெரிசலில்
துடிக்கும்
நீ...
வீரியமின்றி
கனத்து தொங்கும்
விதைக்கொட்டையாய்
புண்ணின் பழுத்த
நாற்றமடிக்கும் வீச்சமாய்
விடாப்பிடியின்றி
நழுவும்
போதையில்
அமிழ்ந்து அடங்கிக் கொள்ளும்
துண்டுபட்டு
ஒழுக்கும் சழுவைகளில்
மாமிசச் சளியாய்
உன்னில் நினைவுறுத்துகையில்
கருகிய வெளியில்
என்னிலும் நீ...

No comments:
Post a Comment