முன்னிருந்து
ஆராய்வதில்
இழந்துவிடும்
மொன்னை
முகங்களின்
நகையாடும்
சர்ப்பத்
தீண்டல்
கிழித்து
வெளிக்காட்ட
இந்த
நிர்வாணம்
வெளிச்சமின்மையில்
அமிழ்ந்திருக்கும்படி
தனித்து
விடப்படும்
ஆன்மாவின்
அமைதியின்மையின்மையினை
ஒவ்வொரு
தடவையும்
தொடும்
மென்
தொடுகையில்
பீறிட்டெழும்
வெளிச்சம்
இரைச்சலுக்குட்பட்ட
பின்னல்களில்
தன்னை
இருட்டும்
சராசரித்தனத்தின்
அடைப்புகளில்
பாழின்
நிரந்தரம்

No comments:
Post a Comment